சாதிப்பாசத்தால் வரும் சாப்பாடும் வேலை செய்யாமல் வரும் அரசு சம்பளமும்....
இராஜபாளையம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன.இவற்றை நான்கு பாகங்களாக பிரித்து ஒன்பது ஊராட்சிகளுக்கு ஒரு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதில் லதா என்பவருக்கும் ஒன்பது ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.ஆனால் லதா என்பவர் சில குறிப்பிட்ட ஊராட்சிகளில் உட்கார்ந்துகொண்டு மற்ற ஊராட்சி செயலாளர்களை இவர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து கையொப்பம் போடுகிறார்.மேலும் காலை பத்து மணிக்கு இராஜபாளையம் ஒன்றியத்திற்க்கு வந்து கையொப்பம் இட்டு மற்ற பணிகளை பார்க்கவேண்டும். மாறாக யூனியன் அலுவலகத்திற்கே வராமல் ஒரு மணிக்கு இவருடைய சாதிக்காரர் பணிபுரியும் ஊராட்சிக்கு வீட்டிலிருந்தே 12 மணிக்கு கிளம்பி ஒரு மணியளவில் ஊராட்சிக்கு செல்லுவதாகவும் பின்னர் சாப்பிட்டுவிட்டு 5 மணியளவில் வீட்டிற்கு செல்லுவதாகவும் யூனியன் அலுவலகர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கூறுகின்றனர்.இவருடைய வருகை பதிவேட்டில் கூட வாரத்திற்கு ஒரு முறை தான் கையொப்பம் இடுகின்றதாகவும் கூறுகிறார்கள்.