தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் A.B. தமீம் அன்சாரி சாஹிப் கோரிக்கை மனு ...
இன்று 19 ஆகஸ்ட் 2026 அன்று, *தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் A.B. தமீம் அன்சாரி சாஹிப் , சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஷாஜஹான் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, சிறுபான்மையின மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான மானிய கோரிக்கை மனுவை வழங்கினார்.*
இந்த மனுவில் நடைபெற்று கொண்டிருக்கும் சட்டசபையில் மானிய கோரிக்கையில் இந்த நான்கு முக்கிய கோரிக்கைகளையும் இணைப்பதற்கு TAMCO தலைவர் முன் வைதார்:
• தனிநபர் கடன் உயர்வு – தற்போது வழங்கப்படும் ரூ.1.00 இலட்சம் கடனை, ரூ.3.00 இலட்சமாக உயர்த்த வேண்டும்.
• மானியம் வழங்குதல் – TAHDCO போல, TAMCO வழங்கும் கடனுக்கும் மானியம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சமாக வட்டி தொகையை அரசு வழங்கினால், வட்டி இல்லா கடனாக வழங்கும் வாய்ப்பு உண்டு.
• அனைத்து வங்கிகள் மூலம் கடன் – தற்போது மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் வழியாக மட்டுமே வழங்கப்படும் TAMCO கடன்களை, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வங்கிகளிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
• வட்டி இல்லா வங்கி அமைப்பு – இஸ்லாமிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, வட்டி இல்லாமல் கடன் வழங்கும் புதிய வங்கி அமைப்பை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும்.
இந்த நான்கு கோரிக்கைகள் சிறுபான்மையின மக்களின் தனிநபர் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முக்கியமான அடித்தளமாக அமையும்.
சிறுபான்மையின மக்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இச்சந்திப்பு, ஆக்கப்பூர்வமானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்தது.