திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வீடு வீடாக வழங்கினார்
திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வீடு வீடாக வழங்கினார்
திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வீடு வீடாக வழங்கினார்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று 20/02/26 திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 55வது வார்டு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வீடுவீடாக இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் பனிஸ்மென்ட் பில்லை ஏஐஏடிஎம்கே கனெக்ட் செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, பேரவை வழக்கறிஞர் தினேஷ் பாபு, வட்ட செயலாளர்கள் கதிர்வேல், பெருமாள், வெங்கடேஷ், அமீர்பாஷா, மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் டிபன் கடை கார்த்தி,
சுப்பன் என்கிற சுப்ரமணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.