சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மல்லாக்கோட்டை பகுதியில் குவாரியால் பிரச்சனை?
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் மல்லாக்கோட்டை ஜெயங்கொண்டான் நிலை ஆகிய பகுதிகளில் குவாரிகள் இயங்கப் போவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதியுடன் இயங்கப் போகும் குவாரிக்கு பொதுமக்கள் முழு ஆதரவு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் மல்லாக்கோட்டையில் இயங்கப் போகும் குவாரியின் உரிமையாளர் மேகவர்மன் (சிலம்பரசன்) சிலரை தூண்டிவிட்டு பிரச்சனை செய்வதாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும் தங்கள் வேலை வாய்ப்பை தடுப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மூன்றுபேர் வழக்கறிஞர் ஒருவரை வைத்துக்கொண்டு புதிதாக துவங்கப் போகும் குவாரிக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இந்த மூன்று பேரும் புதிதாக துவங்க போகும் குவாரி உரிமையாளரிடம் மிகப்பெரிய தொகையை பெற்றுக் கொண்டதும் தெரிய வருகிறது. மல்லாக்கோட்டை குவாரி அனுமதி இன்றி நடந்தபோது ஆறு நபர்கள் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது இந்த மூன்று நபர்களும் அமைச்சரே நாங்கள் சொல்வதை தான் கேட்பார் என்று பொதுமக்களை மிரட்டி வருகிறார்களாம். எது உண்மை எது பொய் என்று பொதுமக்களுக்கு தெரியாது தற்போது அமைச்சர் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே களத்தில் இறங்கி முறையான அனுமதி உள்ளவர்களுக்கும் பொதுமக்களின் வேலை வாய்ப்புக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களில் கருத்தாக உள்ளது. கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்? நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்?
சிவா@கென்னடி.
தலைமை செய்தியாளர் செய்திகள் விளம்பர தொடர்புக்கு. 9443592514/8489170514