மாநில அளவிலான 41வது சிலம்பம் போட்டி நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை துய மைக்கேல்அகாடமி பள்ளி வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கியது.
மாநில அளவிலான 41வது சிலம்பம் போட்டி நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை துய மைக்கேல்அகாடமி பள்ளி வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கியது. தமிழ்நாடு சிலம்பம் சங்கம், நாகப்பட்டினம் மாவட்ட சிலம்பம் சங்கம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான 41வது சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. பள்ளி தலைவர் ஆல்பிரட்ஜான் தலைமை வகித்தார். திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை,நாமக்கல் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிமான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர். நேற்று(27ம் தேதி) தொடங்கும் போட்டி நாளை(29ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 10 வயது முதல் 14 வயது வரையிலான சப் ஜீனியர், 18 வயது முதல் 25 வயது வரையிலான பொது பிரிவினருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதை தொடர்ந்து 14 வயது முதல் 18 வயது வரை ஜீனியர் பிரிவு, 25 வயதிற்கு மேல் பொதுபிரிவினருக்கான போட்டி ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக து£ய மைக்கேல் அகாடமி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. ஜூரி என அழைக்கப்படும் நடுவர்கள் 106 பேர், அலுவல் சார்ந்த பணிக்கு 25 பேர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் பாண்டிச்சசேரியில் வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்புரை