ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு மற்றும் உதயம் அறக்கட்டளை இணைந்து நடத்திய மகளிர் தின விழா
ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு உதயம் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை முன்னிட்டு ஆரி ஒர்க் மற்றும் சோப் நாப்கின் பயிற்சி கொடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி வென் இஸ் தெரு அந்தோனியார் கோவிலில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் ப. சங்கர் அவர்கள் வரவேற்புஉரையாற்றினார் சிறப்பு விருந்தினராக முனைவர் D.சிவசுப்பிரமணியன் முன்னாள் முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆளுநர் விருது பெற்ற யோகா விஜயகுமார் டாக்டர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிவசக்தி கணேசன் , திருச்சி மாவட்ட வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மாவட்ட பொதுச் செயலாளர் மோகன் ராம் , மக்கள் பொது நல சங்க தலைவர் மனித விடியல் மோகன், தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் லயன்ஸ் ஷாபி சாய் வித்யாலயா நிறுவனர் ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார. இறுதியாக விமல் உதயம் அறக்கட்டளை நிறுவனர் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்