திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை பாராட்டி ரொக்கம் வழங்கினார.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை பாராட்டி ரொக்கம் வழங்கினார.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு. அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 27நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றி வரும் 51 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (26.01.2026) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 27 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள். இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும், உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 51 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் மேயர் மு.அன்பழகன் வழங்கினார்.
எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிக கலை நிகழ்ச்சி மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் நடைபெறறது. கலை நிகழுச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மேயர் மு. அன்பழகன் காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் துணை ஆணையர் க.பாலு, ஆர்.வினோத், நகரப்பொறியாளர் ப.சிவபாதம், நகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, மண்டலத்தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பு.ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ் உதவிஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.