இராஜபாளையம் தாலுகா மேலப்பாட்டம் கரிசல்குளம் தை பொங்கலை விழா
இராஜபாளையம் தாலுகா மேலப்பாட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்தைச் சார்ந்த அம்மன் நகரில் தை பொங்கலை முன்னிட்டு முதலாம் ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவினை லட்சியம் வெல்லும் மாத இதழின் தலைமை செய்தியாளர் முத்துக்குமார் சேத்துரான் இருவரும் தலைமையேற்று நடத்தினர்.15 & 16 தேதியில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரியோர்களுக்கான அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.17 ம் தேதி மாலை ஆறு மணியளவில் பரிசளிப்பு விழாவும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் விசிக. கட்சியின் நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை காவலர் ரவிக்குமார் ஊர் பெரியோர்கள் பொன்னுச்சாமி இராமர் தொழிலதிபர் கண்ணன் மற்றும் ஆசிரியர் கதிரவன் விழாவினை சிறப்பித்தனர்.மேலும் இவ்விழாவிற்க்கு களப்பணியாற்றிய மகளிர் அணியினர் மீனா தேவகி (என்ற) நந்தினி செல்வி மற்றும் முருகலட்சுமி.
இளைஞர் அணியினர் மணிகண்டன் நவின்குமார் அர்ஜூன் அஜய் மற்றும் நித்திஷ்குமார் மாதேஷ் ஆகியோர் முன்னின்று இவ்விழாவினை நடத்தி இறுதியாக நன்றியுரையாற்றினார்காள்.