தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் 149 பயனாளிகளுக்கு ரூபாய் 6.33 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான கடனுதவி மற்றும் கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் கலந்து கொண்டனர்.