பேருந்து நிறுத்தத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை!
திருமங்கலம் கற்பக நகர் – பாலகுரு கமலாதேவி மஹால் அருகே புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் மற்றும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரை முழுமையாக செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
எனவே, கற்பக நகர் பேருந்து நிறுத்தம் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக பயன்பாடின்றி இருக்கும் பயணியர் நிழற்குடையை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.