திருச்சி KAPV & MGMGH அரசு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை மற்றும் மகப்பேறு & மகளிர் மருத்துவ துறையில் முதல் அம்னியோசென்டீசிஸ் (Amniocentesis) பரிசோதனை
திருச்சி KAPV & MGMGH அரசு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை மற்றும் மகப்பேறு & மகளிர் மருத்துவ துறையில் முதல் அம்னியோசென்டீசிஸ் (Amniocentesis) பரிசோதனை
திருச்சி KAPV & MGMGH அரசு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை மற்றும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறைகள் இணைந்து, முதல் அம்னியோசென்டீசிஸ் (Amniocentesis) வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது மருத்துவமனைக்கு ஒரு முக்கியமான சாதனையாகும்.
இந்த நடைமுறை, 21 வார கர்ப்ப காலத்தில் உள்ள 35 வயதுடைய (G3P2L2) கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பகால பரிசோதனைகளில் கருவில் மூக்கெலும்பு (nasal bone) ossification இல்லாமை மற்றும் Double Marker Test abnormality காரணமாக, Down syndrome அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
முழுமையான ஆலோசனை வழங்கப்பட்டு, நோயாளியிடமிருந்து உரிய சம்மதம் (informed consent) பெற்ற பின்,பாதுகாப்பாக அம்னியோசென்டீசிஸ் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் சுமார் ₹ 40,000 வரை செலவாகும் இந்த பரிசோதனை, அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு எந்தச் செலவுமின்றி முழுமையாக இலவசமாக செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன; இதற்காகவும் நோயாளிக்கு எந்த நிதிச் சுமையும் ஏற்படவில்லை.
இந்த செயல்முறை DEAN பேராசிரியர் டாக்டர் எஸ். குமரவேல் திறமையான வழிகாட்டலும் ஆதரவும் கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சேவைகளை மருத்துவமனையில் தொடங்குவதற்கான அவரது தலைமையும் ஊக்கமும் முக்கிய பங்காற்றியது
இந்த சாதனை, மேம்பட்ட கருவுறுப்பு நோயறிதல் சேவை, துறைகள் இடையேயான சிறந்த ஒத்துழைப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்; எதிர்காலத்தில் இதுபோன்ற அத்தியாவசிய சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சமூகத்தின் நலனுக்காக வழங்க முனைந்துள்ளோம் என்று நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூபாய்.3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு அமைச்சர் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்புரை