தென்காசி அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவ மாணவிகளால் பரபரப்பு
தென்காசி அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவ மாணவிகளால் பரபரப்பு
தென்காசி மாவட்டம், புதூர் பேரூராட்சி பூலாங்குடியிருப்பு மற்றும் லாலாக்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பேருந்துகள் திரும்பும் இடத்தில் மின்சார வாரியத்தின் இரண்டு மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதினால் பஸ் திரும்ப வழியில்லாமல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் , வயது மூத்தோர், பொது மக்கள் ஆகியோர் 1 கிலோ மீட்டர் தூரம் பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் பக்கம் சென்று பேருந்து ஏறும் நிலை உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது வரை மின் கம்பங்கள் மாற்றம் செய்யவில்லை எனக் கூறி பள்ளி மாணவிகள் செங்கோட்டையில் உள்ள மின் வாரியம் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர் மேலும் அங்குள்ள உதவி மின் பொறியாளர், அன்னராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் மாற்றி தருவதாக உத்தரவளித்தன் பேரில் மாணவ மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.