தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை காரியாபட்டினம் காவல் நிலையம்
காரியாபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்த முயன்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்த முயன்றதாக முனுசாமி (S/o. குருசாமி), வாய்மேடு கிழக்கு என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அருட்செல்வம் (S/o. செல்லத்துரை), அண்ணாபேட்டை தெற்கு, வாய்மேடு என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்:
- Tobacco – 5 கிலோ
- Pan Masala – 20 கிலோ
- Hans – 31 கிலோ
- Coolip – 64 கிலோ
மொத்தம் 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக காரியாபட்டினம் காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.